வேலூர் : பெண்களுக்காகவே எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழகத்தில் தான் என கல்லூரி விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார்.
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50 ஆம் ஆண்டு விழா கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் காத்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் உதவிதொகை ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழக அரசு பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழக முதல்வர் தான்.
மகளிர் கல்வியில் முன்னேற்றம் அடைந்தாலும் தாய் தந்தையரை கவனிக்க வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டு தாங்கள் பயின்ற கல்லூரியை மறந்துவிட கூடாது மாணவர்கள் முன்னேற்றம் அனைவரின் முன்னேற்றமாகும் என்று பேசினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.