வேலூர் : பெண்களுக்காகவே எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழகத்தில் தான் என கல்லூரி விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார்.
வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50 ஆம் ஆண்டு விழா கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் காத்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் உதவிதொகை ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழக அரசு பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழக முதல்வர் தான்.
மகளிர் கல்வியில் முன்னேற்றம் அடைந்தாலும் தாய் தந்தையரை கவனிக்க வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டு தாங்கள் பயின்ற கல்லூரியை மறந்துவிட கூடாது மாணவர்கள் முன்னேற்றம் அனைவரின் முன்னேற்றமாகும் என்று பேசினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.