தமிழகம்

பிரியாணியில் பூச்சி.. 10 பிரியாணி, ஆம்லேட் கேட்ட ஐடி ஊழியர்கள்.. இறுதியில் ட்விஸ்ட்!

கோவையில், பிரியாணியில் பூச்சி இருப்பதாக 10 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரைத் தாக்கிய ஐடி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் கோவை, சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சமீபத்தில், கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்குத் தேடி வந்த அவர்கள், பிரியாணியில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அந்த பிரியாணிக்குப் பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளனர். அதன் பின்னர் சிக்கன், ஆம்லேட்டுக்காகவும் தகராறு செய்துள்ளனர்.

மேலும், ஓட்டல் உரிமையாளரையும் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஓட்டல் உரிமையாளரைத் தாக்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சக்திவேல் (23) மற்றும் கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்த பஹீம் அகமத் (24) என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பாதி எரிந்த நிலையில் காவலர் சடலமாக மீட்பு.. மதுரையை கதிகலங்க. வைத்த சம்பவம்!

மேலும், அவர்கள் துடியலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

14 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

15 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

15 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

15 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

15 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

16 hours ago

This website uses cookies.