தமிழகத்தில் அந்த BJP வேட்பாளர் வெற்றி பெற்றால் சிறந்தது : சுப்பிரமணியன் சுவாமி வைத்த TWIST!
தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 2019ல் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை.
இதனால் இந்த லோக்சபா தேர்தல் மூலம் தமிழகத்தில் இருந்து சில எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பும் நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வியூகம் வகுத்து இருந்தார். அதோடு பாஜக மேலிடமும் தமிழகத்தில் நிச்சயம் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல் முருகன் (நீலகிரி), முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), நடிகை ராதிகா (விருதுநகர்), பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்ளிட்டவர்களை களமிறக்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 20 முதல் 25 சதவீத ஓட்டுகளை பெறும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதோடு பாஜக கூட்டணி 20க்கும் அதிக இடங்களில் வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த நம்பிக்கை பலிக்கிறதா? இல்லையா? என்பதை நாம் அறிய ஓட்டு எண்ணிக்கை தினமான ஜுன் 4 வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டில் இருந்து பாஜகவின் ஒரு வேட்பாளர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் கட்டாயம் மகிழ்ச்சியடைவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் (நயினார் நாகேந்திரன்) வெற்றி பெற்றால் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். அதேவேளையில் நான் பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரீட்சயமானவர்கள் இல்லை. இதனால் அவர்களை பற்றி கருத்து சொல்லாமல் இருப்பதே சிறந்தது” என கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தபோதும் கூட சுப்பிரமணியன் சுவாமி, ‛‛திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.