Categories: தமிழகம்

இனிமேல் தான் எங்களுக்கு தீபாவளி… கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகன் பகீர் வாக்குமூலம்!!!

இனிமேல் தான் எங்களுக்கு தீபாவளி… கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகன் பகீர் வாக்குமூலம்!!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44.

இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற மகள் மற்றும் சஞ்சய் என்ற மகன் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சரவணன் தனது வீட்டின் முன்பு கயிற்றுக் கட்டிலில் இறந்து கிடப்பதாக அவரது தந்தை கருப்பண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்து மகன் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக மகன் இறந்து கிடப்பதாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி அமுதா மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வைரிசெட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரவணனை தாங்கள் தான் கொலை செய்தோம் எனவும் கட்டிலில் படுத்து உறங்கியவரை தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ததாகவும் அதற்கு முன்பாக கால்களையும் கைகளையும் கயீற்றால் கட்டி கொலை செய்தோம் எனவும் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததால் இவ்வாறு செய்ததாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர்.

இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளான அமுதாவையும் சஞ்சய் என்பவரையும் உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.