இனிமேல் தான் எங்களுக்கு தீபாவளி… கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகன் பகீர் வாக்குமூலம்!!!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44.
இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற மகள் மற்றும் சஞ்சய் என்ற மகன் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சரவணன் தனது வீட்டின் முன்பு கயிற்றுக் கட்டிலில் இறந்து கிடப்பதாக அவரது தந்தை கருப்பண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்து மகன் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக மகன் இறந்து கிடப்பதாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறந்தவரின் மனைவி அமுதா மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வைரிசெட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரவணனை தாங்கள் தான் கொலை செய்தோம் எனவும் கட்டிலில் படுத்து உறங்கியவரை தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ததாகவும் அதற்கு முன்பாக கால்களையும் கைகளையும் கயீற்றால் கட்டி கொலை செய்தோம் எனவும் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததால் இவ்வாறு செய்ததாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர்.
இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளான அமுதாவையும் சஞ்சய் என்பவரையும் உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.