தமிழகம்

ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு.. புல்லட் துளைக்காத கார் பறிமுதல்..!

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு பல்நாடு மாவட்டம், நல்லப்பாடு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஜூன் 18-ம் தேதி ரெண்டபாலா கிராமத்திற்கு அவர் சென்றிருந்தபோது, அவரது வாகன அணிவகுப்பில் சிக்கி ஒய்.எஸ்.ஆர்.சி.பி தொண்டர் சிங்கையா உயிரிழந்தது தொடர்பாகவே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: அங்கன்வாடி பணியாளர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விபத்தும், வழக்கு மாற்றமும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி செல்லி லூர்து மேரி அளித்த புகாரின் பேரில், நல்லப்பாடு போலீசார் ஆரம்பத்தில் பாரதிய நியாய சம்ஹிதா பி.என்.எஸ். பிரிவு 106(1) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி மற்றும் ட்ரோன் காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், சிங்கையா ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனத்தால் நசுக்கப்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு பி என் எஸ் பிரிவுகள் 105 (கட்டுப்படுத்தக்கூடிய கொலை) மற்றும் 49 (உயிர் அச்சுறுத்தல்) கீழ் மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக, தாடேப்பள்ளியில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அலுவலகத்திற்கு நல்லப்பாடு போலீசார் சென்று நோட்டீஸை வழங்கினர்.

ஜெகன் மோகன் ரெட்டி அங்கு இல்லாத காரணத்தால், கட்சியின் அலுவலக பொறுப்பாளரும், எம்.எல்.சி.யுமான அப்பிரெட்டிக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதேபோல், விபத்துக்கு காரணமான ஜெகன் புல்லட் புரூப் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

2 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

3 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

4 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

4 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

5 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

6 hours ago

This website uses cookies.