கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெகத்ரட்சகன்.. இதெல்லாம் பழி வாங்கும் நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி கருத்து!!
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பிலும் விழுப்புரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.
இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று முதல்வர் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் அரசியல் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆங்காங்கே சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதுவும் ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை அவர் எப்படி உழைப்பால் உயர்ந்தவர் என்று என்பதை நாடு அறியும். எனவே வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நேற்று தமிழக முதலமைச்சர் சொல்லியதைப் போல இன்று அதையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். ஆகவேதான் அவரை எப்படி பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்றுக் கொண்டிருப்பது என்று மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.