தமிழகம்

போலீசே ஆதரவு.. என்ன கொலை செஞ்சிடுவாங்க.. ஜாகீர் உசேன் பேச்சு!

கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக கொலையுண்ட ஜாகிர் உசேன் வீடியோவில் கூறியுள்ளார்.

திருநெல்வேலி: நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி (57), காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக வும்இருந்தார்.

இந்த நிலையில், ரம்ஜானை ஒட்டி நோன்பு இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலையில் தர்காவுக்கு தொழுகைக்குச் சென்று திரும்பும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த நிலையில், ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “கிருஷ்ணமூர்த்தி என்பவர் தெளபிக் என தனது பெயரை மாற்றி, இஸ்லாமில் சேர்ந்துள்ளார். இரண்டாவதாக இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில், தனது மனைவி மூலமாக வஃக்பு வாரியத்தின் சொத்தான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்று வருகிறார்.

அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், என் மீதும் எனது மனைவி மீதும் வன்கொடுமை வழக்கு கொடுத்துள்ளார். இது விசாரணையில் உள்ளது. பிரச்னைக்குரிய நிலத்தின் அருகில் உள்ள 2.5 சென்ட் வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் வருமானம் ஈட்டும் நடவடிக்கையாக ஒரு தற்காலிக கொட்டகை அமைக்க முயன்றேன்.

அப்போது பகிரங்கமாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக் கொலை மிரட்டல் விடுத்தார். எனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எப்படியும் என்னை கொலை செய்து விடுவார்கள். கொலை மிரட்டல் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.

இதையும் படிங்க: 25வது நாளை கடந்த ‘டிராகன்’.. தியேட்டரில் வசூல் ஆட்டம்..!

தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர்தான் எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக கொடுக்கப்பட்டும், காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியுள்ளார்.

மேலும், இந்தக் கொலை மிரட்டல் சம்பவத்தின் பின்னணியிலும் வஃக்பு இடம் ஆக்கிரமிக்கும் பின்னணியிலும் திமுகவைச் சார்ந்த மின்சார வாரியத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர் ஒருவரின் பெயரையும் ஜாகிர் உசேன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

48 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

50 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

1 hour ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.