சென்ற இடமெல்லாம் ஜெயம் : விருதுகளை அள்ளிய ஜெய்பீம்.. ஆஸ்கரால் புதிய சாதனைக்கு தயாராகும் தமிழ் சினிமா!!

ஒரு திரைப்படம் உருவாகி வெளியாவது என்பது சுலபமான காரியமல்ல. தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என தயாரிப்பாளர், இயக்குநர்கள் முதல் படக்குழுவே இந்த கூற்றை ஒப்புக்கொள்ளும்.

அப்படி உருவான படங்கள் தரமாக இருந்தாலும் மக்கள் மனதில் பதிய தவறிவிடுகின்றன. அதே போல ஒரு படம் திரையரங்குகளில் ரிலீசாகாமல் போனால் அதில் ஏற்படும் நஷ்டம் மரணத்தை விட கொடுமையானது.

இதையெல்லாம் தாண்டி கொரோனா என்னும் பேரிடரால் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய்பீம். உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டம் படம் ஜெய்பீம். படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும், வெற்றிக்கனியை சுவைத்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் சந்துரு போராடிய கதையை கையில் எடுத்த இயக்குநர் ஞானவேல், அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து கோட்டையில் கொடி நாட்டியுள்ளார்.

படம் வெளியானது முதல் தமிழ் ரசிகர்களால் புடை சூழப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியிலில் தேர்வானது உலக தமிழர்களால் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படக்காட்சி இடம்பெற்றது, உலக சினிமா ரசிகர்களையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படம் மூன்று விருதுகளை குவித்துள்ளது. சிறந்த நடிகருக்காக சூர்யா, சிறந்த நடிகைக்காக லிஜோமோல் ஜோஸ், சிறந்த படம் என 3 பிரிவுகளில் விருதை வென்று அசத்தியுள்ளது.

தனை அடுத்து படக்குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு வேளை ஆஸ்கர் விருதில் ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைத்தால் தமிழ் சினிமா புதிய அத்தியாயத்தை பதிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

27 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

57 minutes ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

1 hour ago

சென்னை புறப்பட்ட விஜய்.. பவுன்சர்களால் கொடைக்கானல் விவசாயிகள் அவதி.!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…

1 hour ago

டாப்ஸ்லிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற மருத்துவர்… சடலமாக திரும்பி வந்த சோகம்!

தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

This website uses cookies.