தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. தற்போது, மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர், அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஆர்த்தி. தொடர்ந்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், குடும்பங்கள் தொடர்பான பதிவுகள் என அடிக்கடி பல விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த பதிவில், “உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக, அல்லது நண்பராக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாக தான் பார்ப்பார்கள். இந்த பிரபஞ்சமே இறுதியில் அவர்களை களை எடுக்கும். நீங்கள் எதுவும் போராட வேண்டியதில்லை” என இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெயம் ரவியுடன் கருத்து வேறுபாடு வந்துள்ளதா என நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.