திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை. மர்ம நபர்கள் குறித்து மத்திய போலீசார் விசாரணை.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமர்சிங் (வயது 54) இவர் திருப்பூர் ஏ.பி.டி சாலை பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் திருப்பூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அமர்சிங் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை கேரளாவிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று மாலை திரும்பிய போது வீட்டு கதவின் தாழ் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்களால், பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.