கோவை : ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.78 கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் டி_4 பெட்டியில் கோவை செல்வபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்த அழகிரி என்பவர் பயணம் செய்தார்.
அவர் வைத்திருந்த பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தார்
அதில் கணக்கில் வராத 3.900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை கோவையிலிருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது
இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த ஆபரண தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 78 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
இதைத் தொடர்ந்து இவர் சேலம் வரி விதிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.