தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் திருநெல்வேலி கொக்கிர குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அனைத்து அரசியல் கட்சியினரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. தென்காசி உட்பட 3 மாவட்டங்களுக்கு பாக முகவர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்டாயம் போட்டியிடும். நான் போட்டியிடுகிறேனா எனது கட்சியை சார்ந்த வேற யாரும் போட்டிடுவார்களா? என்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுப்போம்.
தேர்தலின் போது உள்ள அரசியல் சூழலை பொறுத்து அதிமுகவுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது குறித்து முடிவு எடுக்கபடும். தேசியமா, தமிழகமா என்பது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
பாஜகவோடும், அதிமுகவோடும் நட்புடன் தான் இருந்து வருகிறோம். வரக்கூடிய தேர்தல் மட்டும் இல்லை. எப்போதுமே மத்தியில் ஆட்சி அமைப்பது மோடி தலைமையிலான அரசு மட்டுமே. இந்தியா கூட்டணி தற்போது சீர்குலைந்துள்ளது. அவர்களிடம் ஒற்றுமை இல்லை. இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று சொல்ல முடியாத நிலையில் அவர்கள் உள்ளார்கள்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து கேள்விக்கு சிலர் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஒரு சிலர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறார்கள் முடிவு வரட்டும் பார்க்கலாம். தமிழகத்தை மட்டும் வைத்து இந்தியாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியாது, என்று தெரிவித்தார்.
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
This website uses cookies.