தமிழகம்

சிறார் கேங்ஸ்டராக மாற இதுதான் காரணம்.. கோர்ட்டே சொன்ன அதிரடி கருத்து!

மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் கோரி மனு ஒன்றினைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (நவ.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் செல்போனை திருடி விட்டார் என்பதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தொடர்ந்து அவர், மனுதாரருக்கு 19 வயதாகும் நிலையில், அவர் மீது கைது செய்யப்பட்ட அன்றே 4 வழக்குகள் பொய்யாக பதியப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில், மனுதாரர் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலவையில் உள்ளதாகவும், சமுதாயத்திற்கு தொந்தரவாக மனுதாரர் செயல்பட்டு வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி காவல் துறை மற்றும் நீதித்துறைக்கு சில கருத்துகளைத் தெரிவித்தார்.

இதன்படி பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு இளைஞன் அல்லது சிறார் ஒரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்த உடனே தொடர்ச்சியாக அவர் குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறார். இதனால் ஒரு கூட்டத்தின் தலைவனாக அவர் மாறுகிறார்.

இது குற்றவாளிகளாக மாறிய பல சிறார்களின் கதை. மாநிலத்தில் சிறார்களைச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது தமிழகத்தில் பரவவில்லை. இந்த உத்தரவை தமிழக சிறைத் துறையின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மதுரை சரக சிறைத் துறையின் துணை காவல்துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!

மேலும், மனுதாரர் செப்டம்பர் 29ஆம் தேதியில் இருந்து சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபதனை ஜாமீன் வழங்கப்படுகிறது. இதன்படி, அவர் மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்” என்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.