Categories: தமிழகம்

ஆளுநருக்கு தபால்காரர் வேலைதான்… அதிகாரம் செய்வதல்ல… கி.வீரமணி பரபரப்பு பேச்சு..!! (வீடியோ)

கரூர் : கையெழுத்து போடத்தெரியாத பார்ப்பனரை பார்க்க முடியுமா..? என்று நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை பயணத்தில் திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் நீட், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் முதல் சென்னை வரை செல்லும் இந்த பரப்புரை பயணம் பல்வேறு மாவட்டங்கள் சென்று விட்டு நேற்று இரவு 9 மணியளவில் கரூர் நகர காவல் நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கீ.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :- நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறோம் என்பதை ஏன் எதிர்கிறோம் என்பதை முழுவதுமாக விளக்கமாக போட்டுள்ளோம். திராவிட மாடல் என்பதற்கு அடிப்படை சமூக நீதி கட்சி தான். எதை கொடுத்தாலும் கீழ் ஜாதியினருக்கு கொடுக்க கூடாது என்ற நிலை இருந்தது. 102 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தந்தை பெரியார் குறுகுலத்தில் படித்தவன், நீதிகட்சியின் ஆட்சி என்றார்.

தமிழ் உலகளாவிய மொழி.சமஸ்கிருதம் தேவ பாஷை. அது செத்து போன மொழி. அப்போது யாரும் சமஸ்கிருதம் படிக்க முடியாது. சமஸ்கிருதம் என்றால் நன்றாக செய்யப்பட்டது என பொருள். 100 ஆண்டுக்குப் பிறகு மோடி புதுப்பிக்கிறார். அதன் அடிப்படை தான் நீட் தேர்வு. உலகளவில் ஆராய்ச்சி செய்து கொடுத்த பெயர் தான் திராவிடன் மாடல். இந்திய மொழிகளிலும், வெளி நாட்டு மொழிகளிலும் பெரியாரின் வார்த்தைகள் மொழி பெயர்க்கிறோம்.

நீட் தேர்வு நாம் வேண்டாம் என்கின்ற நேரத்தில் புதிய கல்வி கொள்கை கொண்டு வருகிறார்கள். அது குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருக்கிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் ஆனது இந்த கல்விக் கொள்கையில் தான் படித்தார். அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கில் தற்போது செயல்படுகிறது அரசு. தொடக்க கல்வி முதல் பல்கலைக் கழக படிக்கும் வரை இட ஒதுக்கீடு கிடையாது என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஊக்கத் தொகை வழங்கிறது தமிழக அரசு.

புதிய கல்விக் கொள்கையில் 3 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு வைக்கிறார்கள். ஆனால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். படிக்க கூடாது என்பதற்காக ஒரு கல்விக் கொள்கை அது புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் தோல்வி அடைந்தால் தாய், தந்தைக்கு உதவி செய்யுங்கள் என்கிறது என்கிறது.

சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். அவருக்கு அந்த வேலை கிடையாது. அவருக்கு வேலை தபால் காரர் வேலை. அரசியல் சட்டத்தின் படி 2வது முறையாக அவருக்கு சட்டப்படி தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் செய்ய மறுக்கிறார். அவர் தானா செய்ய மாட்டார். டெல்லியில் இருந்த சொல்வதை செய்கிறார்.

மோடி ஆட்சியில் தான் நாள் ஒன்றுக்கு 1000 கோடி சம்பாத்தித்தார்கள் என்றால் அம்பானி, அதானி மட்டுமே. விழிப்புணர்வு உருவாக்க வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி நாங்கள் கேட்கிறோம். மாநில அரசு சிறப்பாக செயல்பட முட்டுக் கட்டை போடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

32 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

33 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

1 hour ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

2 hours ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

3 hours ago

This website uses cookies.