Categories: தமிழகம்

கள்ளழகர் வர்றாரு… டாஸ்மாக் கடையை மூடுங்கோ : மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் மனு..!!

மதுரை சித்திரை திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 5 நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் மனு அளித்து உள்ளனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் அளித்த புகார் மனுவில் மதுரை நகரில் உலக புகழ் வாய்ந்த சித்திரை திருவிழா மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகின்ற வைபவம் தொடங்கி மே 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் மீது பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். எனவே வருகின்ற மே 5 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை முட உத்தரவிட வேண்டும்.

மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்கின்ற ஊழியர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்திரை திருவிழாவில் கடந்தாண்டை போன்று உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அப்போது விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளிரணி தலைவி மீனா, மற்றும் பாஜக அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

7 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

58 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.