கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவிக்கு கோவையில் பாமக சார்பில் கண்ணிர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டம் நடத்தி அப்பகுதியே போர்களமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் பள்ளியை சூறையாடினர்.
அந்த மாணவியின் மரணம் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, தற்போது பள்ளியில் முகாமிட்டு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அம்மாணவிக்கு கோவை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீமதிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “ஸ்ரீமதி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி” என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மாணவியின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகாத நிலையில், கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.