Categories: தமிழகம்

“கள்ளச்சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனால் கலப்பு”- சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. கள்ளச்சாராயம் மருந்து இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கண்ணு குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, சின்னத்துரை ஆகியோர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி யினர் தற்போது முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த 17ம் தேதி ஆந்திராவிலிருந்து மாதேஷ் என்பவரிடமிருந்து தொழிற்சாலைகளில் காலாவதியான மெத்தனாலை சின்னத்துறை வாங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சின்னதுறையிடமிருந்து 90 லிட்டர் மெத்தனால் மற்றும் 100 சிறிய மெத்தனால் பாக்கெட்டுகளை கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் வாங்கியுள்ளார். கண்ணுக்குட்டியின் சகோதரர் தாமோதரன் மெத்தனாலை குடித்துப் பார்த்து இது கெட்டுப் போய்விட்டது என்று கூறியுள்ளார்.அதற்கு சின்னத்துறை உயர்தர சரக்கு அப்படித்தான் இருக்கும் என்று கூறி விற்பனை செய்துள்ளார்.

எப்போதும் சின்னதுரை முழு பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் மெத்தனாலை விற்பனை செய்வாராம். ஆனால் இந்த முறை முன் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு மெத்தனாலை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் செயல்படாத ரசாயன நிறுவனங்களில் இருந்து இந்த மெத்தனாலை மாதேஷ் என்பவர் கொண்டு வந்து சின்னத்துரையிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. சின்னத்திரை அளித்த தகவலின் பெயரில் புதுச்சேரி சேர்ந்த மாதேஷ் என்பவரையும், சின்னத்துரையின் நண்பர்களான ஜோசப் ராஜா, பாண்டிச்சேரி சேர்ந்த மதன்குமார் ஆகிய நபர்களை சிபிசிஐடியுங்கள். கைது செய்துள்ளனர் மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும்போது இத்தனை செக்போஸ்ட்கள் இருந்தும் எப்படி மெத்தனால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும், மாதேஷ் என்பவரிடமும்,மற்ற குற்றவாளிகளிடமும் இன்னும் தீவிர விசாரணை நடத்திய பிறகு தான் நிறைய தகவல்களை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sangavi D

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.