Categories: தமிழகம்

இன்னும் ஓயாமல் ஒலிக்கும் மரண ஓலம்!விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே இறந்தவர்களின் உடல் உறவினர்களால் தகனம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் கருணாபுரம் பகுதி முழுவதும் மரண ஓலத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நாமக்கல் சேலம் புதுச்சேரி கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கலாச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர் இது குறித்து சம்பந்தப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் ஒருபுறம் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்க மறுபுறம் சிபிசிஐடியினர் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்னும் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகள் கொடுக்கும் தகவலின் பெயரில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மேலும் கருணாபுரம் பகுதியில் உள்ள அனைவரது வீட்டிலுமே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது வரை 141 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஏழு பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். குறிப்பாக 20 பேர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

Sangavi D

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

24 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.