கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சார்ந்த சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் இன்று காலை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அம்பிகா அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். காலை மாலை இருவேளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.