தமிழகம்

கமல், கேப்டன் மகனுக்கு கிரீன் சிக்னல்? வானதிக்கு வானவெடி தான்.. முடிவு கொடுத்த சந்திப்பு!

கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்க திமுக தலைமையிலான கூட்டணி முடிவு செய்துள்ளதே இன்றைய அமைச்சருடனான சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

சென்னை: “அதிமுக உடன் கூட்டணி அமைத்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதிமுக உடனான கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது” எனக் கூறியுள்ளார், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த ரேஸில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனும் உள்ளனர். முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் நிச்சயமாக எம்பி ஆவார் என்றும், சுதீஷை மாநிலங்களவை எம்பி ஆக்கவும் கட்சி முடிவு செய்தது. ஆனால், நிலைமை சற்று தலைகீழானது.

இந்த நிலையில் தான், மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட் பற்றிய பேச்சு எழத் தொடங்கி உள்ளது. ஏனென்றால், வருகிற ஜூலை 24ஆம் தேதியுடன் ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் எம்பியாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

அதேபோல், திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. மேலும், மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடையும் நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: காதலர் தினத்தைக் கொண்டாட தயாரா? 10 படங்கள் ரிலீஸ்.. முழு லிஸ்ட் இதோ!

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்துள்ளார். எனவே, கமலுக்கு எம்பி சீட் உறுதியாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசனை வீழ்த்தி, பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த முறை கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டால், கோவையில் அவர் நிற்கமாட்டார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், அந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து கமல்ஹாசன் களமிறக்கப்பட்டால், போட்டி கடுமையாகும் எனவும் கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.