விக்ரம் படத்தால் குஷியான கமல். அப்போ, அரசியலுக்கு குட்பையா.? அவரே சொன்ன பதில்.!

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் களமிறங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக அவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். பின்னர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு சினிமாவில் பிசியாகி வரும் கமல், அரசியலுக்கு முழுக்கு போட உள்ளதாகவும் தகவல் பரவி வந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை, சினிமாவில் இருந்தாலும் தலைவர் தான். நாங்கள் அரசியலில் எங்கள் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறோம்.

எங்களது அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம், நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலை தேர்ந்தெடுத்தேன்” எனக்கூறி அரசியலை விட்டு விலகப்போவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.