நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அரசியலில் களமிறங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கமல். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக அவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். பின்னர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் 3 என அவர் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
இவ்வாறு சினிமாவில் பிசியாகி வரும் கமல், அரசியலுக்கு முழுக்கு போட உள்ளதாகவும் தகவல் பரவி வந்தன. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது : சிறையில் இருந்தால் தான் தலைவர் என்றில்லை, சினிமாவில் இருந்தாலும் தலைவர் தான். நாங்கள் அரசியலில் எங்கள் பாதையில் சென்றுகொண்டு தான் இருக்கிறோம்.
எங்களது அரசியல் உங்களுக்கு சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம், நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலை தேர்ந்தெடுத்தேன்” எனக்கூறி அரசியலை விட்டு விலகப்போவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.