Categories: தமிழகம்

பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு : கமுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக…

ராமநாதபுரம் : 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசமும் முடிவடைந்துள்ளது.தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் இறுதி வேட்பாளர் பட்டியல் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் போட்டியின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு ராமநாதபுரம் மாவட்டமும் விதிவிலக்கல்ல. இம்மாவட்டத்தில் உள்ள கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கின்றன. இதில் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இன்று பாஜக வேட்பாளர் உட்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.இதில் 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யாஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் 1-வது வார்டு மீனாட்சி, 4-வது வார்டு தேவிசதீஷ்குமார், 5-வது வார்டு உத்தண்ட சுரேஷ், 7-வது வார்டு அப்துல் வகாப் சகாராணி,

8-வது வார்டு கனிமலர் முத்துக்குமார், 10-வது வார்டு அந்தோணி சவேரியார் அடிமை, 11-வது வார்டு ஷேக் முகம்மது, 12-வது வார்டு ஹமீது மீராள் கௌசர், 13-வது வார்டு சித்ராநாகராஜ், 15-வது வார்டு திருக்கம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். இதில் கமுதி பேரூராட்சிக்கு 7 வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்துல் வகாப் சகாராணி என்பவர் தலைவராகவும், 10வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அந்தோணி சவேரியார் அடிமை என்பவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.