Categories: தமிழகம்

ஆன்மீக நகரில் தரமற்ற உணவுகள் விநியோகம்… வேடிக்கை பார்க்கும் உணவு பாதுகாப்பு துறை : வைரலாகும் வீடியோ!!

காஞ்சிபுரம் நகரில் பல உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதால், குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரமான காஞ்சிபுரம் நகருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும், பட்டு சேலை வாங்கும் வியாபாரிகளும் என ஏராளமானோர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒரிசா மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

அதேபோல், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காடு கோட்டை, சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றார்கள்.

வருகின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப உணவகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உணவகங்களில் பணிபுரிய அனுபவம் மிக்க வேலையாட்கள் கிடைக்காததால் உணவகங்களில் உணவு தயாரிப்பதில் பலர் மிகுந்த கவனத்தை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து பரவலாக உள்ளது. சேவை மனப்பான்மையுடன் கூடிய உணவு அளிக்க வேண்டும் என்ற நிலை மாறி விட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்திசாலையில் பிரபல உணவகமான‌ சரவண லஞ்ச் ஹோம் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பொங்கல் ஆர்டர் செய்தார். பொங்கலுடன் சாம்பார், சட்னி பரிமாறப்பட்டது. வாடிக்கையாளர் உணவை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது சாம்பாரில் அட்டைப் பூச்சி ஒட்டிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.

இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதேபோல் பேருந்து நிலையம் அருகே சென்னை பிலால் ஓட்டல் தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பெயரில் ஒரு அசைவ உணவகம் செயல் பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை வர வைப்பதற்காக ஒரு கிலோ சிக்கன் பிரியாணி 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இங்கு உணவு அருந்துகின்றனர்.

இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட்ட கொண்டிருந்த காவலர் ஒருவரின் தட்டில் நீல வாக்கில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி உற்றார். அதேபோல், பக்கத்து டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரின் உணவில் நைலான் ரப்பர் ஒன்றும், இன்னொருவர் தட்டில் ஸ்டேப்ளர் பின்னும் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். குழந்தையின் வயிற்றில் நைலான் ரப்ப ஸ்டாப்லர் பின் சென்று இருந்தால் என்னவாகி இருக்கும் என ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் இட்டனர்.

இதைப் பற்றி ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது சமையலுக்கு புது ஆட்கள் நியமித்ததால் இப்படி வந்துவிட்டது, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டியுள்ளார்.

இதைப் பற்றி தனி பிரிவு காவலர் கூறும்போது :- பலவிதமான உணவகங்களில் அதிகமான தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் சுற்றுலாப் பயணிகள் சாப்பிடுவதால் தரமான உணவை அளிக்க வேண்டும். ஆனால் பல உணவகங்களிலும் கையேந்தி பவன்களிலும் தரமற்ற உணவு பொருட்கள், தரமற்ற எண்ணெய், தரம் அற்ற மசாலா வகைகள், கரப்பான் பூச்சி ,அட்டை பூச்சி ,புழுக்கள் போன்றவை காணப்படுகின்றது. இதற்கு உணவு பாதுகாப்பு துறையினரின் மெத்தனம் தான் காரணம் என வேதனையுடன் கூறினார்.

பொதுமக்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களை தரத்துடன் அளிக்க வேண்டிய உணவகங்கள் இதுபோன்று கவனக்குறைவுடன் செயல்படுவது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பலியான செய்தி கேரளாவையே உலுக்கி விட்டது. உணவகங்களில் சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது கட்டிங் வாங்குவதால் இது போன்ற தரமற்ற நிலையை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளார்கள் என மக்கள் புலம்புகின்றார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.