காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் உள்ள நில அளவையாளர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (50). இவர் காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். தற்போது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் படிக்க: இது முதலமைச்சருக்கு அழகா…? தமிழர்கள் மீது பழி சுமத்த போடும் நாடகம்… CM ஸ்டாலின் மீது பாஜக குற்றச்சாட்டு..!!
இந்நிலையில், பாஸ்கர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி பகுதிகளில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.30 மணியிலிருந்து ஆற்பாக்கத்தில் உள்ள பாஸ்கர் வீடு மற்றும் அவரின் மைத்துனர் மாண்பரசு வீடு ஆகிய 2 இடங்களில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று நில அளவை ஆய்வாளர் பாஸ்கர் தற்போது பணியில் உள்ள ஊட்டியில் அவர் தங்கி உள்ள வீட்டிலும் அப்பகுதியை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.