காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே டிப்பர் லாரி உரிமையாளரை திமுக பிரமுகரின் மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியில் கண்ணன் (31) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கம்மவார்பாளையம் கடைவீதியில் எம் சாண்ட், டிப்பர் லாரி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், கம்மவார் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த கண்ணனை, கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், திமுக கட்சியின் பிரமுகருமான முருகன் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் என்பவர் கத்தியால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
படுகாயத்துடன் இருந்த கண்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, பாலு செட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள். ஏற்கனவே ஹரி கிருஷ்ணன் மீது சில வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள கம்மவார் பாளையம் கடைவீதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.