Categories: தமிழகம்

இரவில் தெருவிளக்குகளுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு… இருட்டில் அரங்கேறும் சம்பவங்கள்.. கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்..?

இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அணைத்து வைக்கப்படுவதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதால், காஞ்சிரம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது .இந்த வார்டுகளில் உள்ள தெரு மின் விளக்குகளை பராமரிக்க மாநகராட்சி தனியார் நபரிடம் ஒப்படைத்துள்ளது. மின்சார ஊழியர்கள் எவ்வளவு மெத்தனமாக இருப்பார்களோ, அதே போலவே மின் விளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைகளும் மாற்றமில்லாமல் உள்ளது.

காஞ்சிபுரம் நகரின் முக்கிய நுழைவு வாயிலான முதல் வார்டுக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, சின்ன தெரு, ஏகாம்பரபுரம் வீதிகள் ஆகியவற்றை சுற்றிலும் சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அப்பளத் தொழில் பிரதான தொழிலாக இருப்பதால், அப்பள தொழில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் நடமாட்டமும், சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்களின் நடமாட்டமும் இரவு முழு நேரமும் இருக்கும்.

எப்போதும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதிகளில் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால், மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தெரு விளக்குகளுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டை மாநகராட்சி தொடர்ந்து கடைபிடிக்கின்றது.

அதேபோல், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரமும் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால், வெப்ப சலனத்தால் தூக்கமின்றி அவதிப்படும் மக்களும், கொசுக்கடியில் குழந்தைகளை வைத்துகொண்டு சிரமப்படும் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள்.

அதிலேயும் மாநகராட்சியின் ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு என இரண்டுலேயுமே திமுக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டு வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களும் வார்டுகள் பக்கமே வந்ததில்லை என்ற குற்றச்சாட்டு அனைவர் மத்தியிலும் உள்ளது.

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவதால் மாநகராட்சியின் பல பகுதிகளில் சமூக விரோத செயல்களும் குற்ற செயல்களும் அதிகம் நடக்கின்றது.

தெரு விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் மூன்று / நான்கு முறை இளம்பெண்களிடம் பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. தெரு விளக்குகள் எரியாததை பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தல், நல்ல சந்தையில் மதுபானம் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் மிக எளிதாக நடைபெறுகின்றது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

14 minutes ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

39 minutes ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

17 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

17 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

17 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

18 hours ago

This website uses cookies.