தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சீபுரம் தேவராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோயில் என பிரசித்து பெற்றுவிட்டது.
ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி, காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்த கோஷ்டிகள் திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொண்டு தொட்டு வருகிறது.
வடகலை, தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி, இருபிரிவினர்களும் இக்கோவிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதித்தது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
தேவராஜ் சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்தபோது, வடகலை தென்கலை இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும் போது, வடக்கலை, தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது . அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி விரட்டி தாக்குவதும் அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்து பக்தர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்று விட்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சீபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். வடகலை, தென்கலை என இரு பிரிவினரும் மோதிக் கொள்ளும் காட்சியை கண்டு இந்த பிரச்சனையை தேவராஜ பெருமாள் வந்தால் கூட முடிக்க இயலாது. இவர்களின் சண்டையினால் நாங்கள் சாமியை தரிசனம் செய்வது தடையாக உள்ளது என வேதனையுடன் கூறினார்.
வடகலை தென்கலை பிரிவினரின் சண்டையை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது தற்போது டிரெண்டிங்காக மாறி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.