திருப்பூர் : காங்கேயம் நகராட்சி 5வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-திருப்பூர் சாலையில் நகராட்சி 5 வது வார்டு பகுதியில் திரு நீலகண்டன் வீதி, சாயப்பட்டறை வீதி, புது விநாயகர் கோவில் வீதி ஆகியவை உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சாக்கடை வசதி மற்றும் முறையான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுகொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், நகராட்சி ஆணையாளர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனுகொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். இதனால் கடும் அதிர்ப்த்திஅடைந்த 5 வது வார்டு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் வைத்துள்ளர். பேனரால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதே போல் 12 வார்டு பகுதியான அய்யாசாமி நகர் காலனியில் இதே போல் நகராட்சியை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு என போர்டும் வாய்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொகுதியில் இருமுறை தேர்தல் புறக்கணிப்பு என போர்டு வைத்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.