தமிழகம்

ஒரு ஸ்கூல் குழந்தை போல.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த கனிமொழி!

ஆளுநர் வீட்டில் இருந்து லீவ் லெட்டர் அனுப்பினால், முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார் என கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய கனிமொழி எம்பி, “ஆளுநர் வீட்டில் இருந்து லீவ் லெட்டர் அனுப்பினால், முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார். எதிரிகளை புறமுதுகிட்டு ஓட வைக்கக்கூடிய இயக்கம் திமுக. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தான் முதலில் பாடப்படும், இதுதான் எங்களுடைய சட்டம்.

நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு ஓடி வந்தவர்கள், உங்களுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு என்ன சம்பந்தம்? தேசிய கீதத்தைக் காப்பாற்ற உங்களை விட முதலமைச்சருக்குத் தெரியும். நீங்கள் பாடம் எடுக்கக் கூடிய இடத்தில் நாங்கள் இல்லை.

இதையும் படிங்க: அவருக்கு அம்மாவா நடிக்கும் போது கூட டபுள் மீனிங் பேசுனாரு.. கமல்ஹாசன் குறித்து பிரபல நடிகை வீடியோ!

நீங்கள் அவமானப்படுத்திக் கொண்டே இருந்தால், நாங்கள் அமைதியாகவே இருப்போம் என நினைக்காதீர்கள், கடைசியில் தமிழகத்தில் பாஜக ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத நிலை வரும் என்பதால் தான், ஆளுநரை திரும்பப் பெறக் கூறுகிறோம். மக்களின் சுயமரியாதைக்காக போராடக்கூடிய இயக்கம் திமுக.

உங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம், திராவிடம் என்று சொன்னாலே தூக்கத்தில் வரும் கனவில்கூட அவர்களுக்கு பயம் வரும். மூன்றாவது முறை ஆளுநர் வெளியேறி இருக்கிறார். இந்த மாநிலத்தில் மட்டும் ஏன் இதே ஆளுநரை வைத்துள்ளீர்கள்? தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.