கன்னியாகுமரி அருகே கனமழையின் போது ஓடையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. வில்லுக்குறி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், நேற்று மாலை கொட்டும் மழையில் பள்ளிக்கு சென்று தாய் ஜோஸ்பின் உடன், வீடு திரும்பிய 2ம் வகுப்பு படிக்கு 7வயது சிறுவன் ஆஷிக், சாலை எது ஓடை எது என தெரியாமல் நடந்து சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக மழைநீர் ஓடையில் தவறி விழுந்து மூழ்கி மாயமானார்.
தாய் அலறி சத்தம் போட்ட நிலையில், அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தீவிரமாக தேடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தின் அடியில் சிக்கியிருந்த அந்த சிறுவனை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி சென்று தாயுடன் வீடு திரும்பிய சிறுவன் ஓடையில் தவறி விழுந்து மாயமாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.