கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின் ரஞ்சித் (27) கொத்தனார் வேலை பார்க்கும் இவருக்கும், ஆலங்கோடு பகுதியை சேர்ந்த பிஇ இன்ஜினியரிங் பட்டதாரியான ஷைனி (27) என்பவருக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
ஷைனி நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்த நிலையில், ஷைனியும் பிரவின் ரஞ்சித்தும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் பிரவின் ரஞ்சித்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், குடிபழக்கத்திற்கு அடிமையான பிரவின் ரஞ்சித்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால், ஷைனி அவருடனான தொடர்பை மெல்ல மெல்ல குறைக்க தொடங்கியதோடு, முகநூல் பக்கத்தையும் பிளாக் செய்து தொடர்பை முற்றிலும் முறித்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து காதலி ஷைனியை தொடர்பு கொண்டும் காதலை அவர் தொடராததால், ஆத்திரமடைந்த பிரவின் ரஞ்சித் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ஷைனியைப் பின் தொடர்ந்து சென்று, அவரை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் வயிற்றில் குத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஷைனியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், கத்தி குத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஷைனி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார், முகநூல் காதலியை கத்தியால் குத்தி தப்பியோடி தலைமறைவாக இருந்த பிரவின் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.