கன்னியாகுமரி அருகே சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது குளச்சல் போலீசார் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமங்களை சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குளச்சல் தனிப்படை போலீசார் நேற்று மாலை குளச்சல் லியோன்நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: நாகரீகம் பற்றி எங்களுக்கேவா..? தமிழர்களை திருடர்கள் போல சித்தரிப்பதா? பிரதமர் மோடிக்கு எதிராக சீறிய சீமான்!!!
அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, இருவர் தப்பியோடிய நிலையில், அபிஷ் என்ற இளைஞர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அபிஷ் அவரது சகோதரர் அனிஷ் மற்றும் விஜின் ஆகிய மூன்று இளைஞர்களும் வாட்ஸ் ஆப் குழு மூலம் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அபிஷை கைது செய்த குளச்சல் போலீசார் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.