கன்னியாகுமரி அருகே சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது குளச்சல் போலீசார் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமங்களை சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குளச்சல் தனிப்படை போலீசார் நேற்று மாலை குளச்சல் லியோன்நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: நாகரீகம் பற்றி எங்களுக்கேவா..? தமிழர்களை திருடர்கள் போல சித்தரிப்பதா? பிரதமர் மோடிக்கு எதிராக சீறிய சீமான்!!!
அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, இருவர் தப்பியோடிய நிலையில், அபிஷ் என்ற இளைஞர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அபிஷ் அவரது சகோதரர் அனிஷ் மற்றும் விஜின் ஆகிய மூன்று இளைஞர்களும் வாட்ஸ் ஆப் குழு மூலம் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அபிஷை கைது செய்த குளச்சல் போலீசார் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.