கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியைச் சார்ந்தவர் பாலமுத்து. இவர் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கணேஷ் என்பவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன் கணேஷை, தந்தை பாலமுத்து குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகன் கணேஷ் தந்தை பாலமுத்துவை கத்தியால் தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி போலீசார் தப்பி ஓடிய கணேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.