கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் காங்கிரேட் சாலை பணி முடிந்த நிலையில், நடைபாதையில் கற்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் குறித்து வாலிபர் ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் உள்ள பிரதான சாலை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில், தற்போது ஜங்சன் பகுதியில் உள்ள சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.
காங்கிரேட் சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், சாலையோரம் உள்ள நடைபாதையை மட்டப்படுத்தாமல் சாலை பணி செய்த ஒப்பந்ததாரர் கற்களை கொட்டி நிரப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், ‘கன்னியாகுமரியின் அதிசயத்தை பாருங்கள். உலகத்தில் எங்கேயாவது ரோட்டு பகுதியில் நடக்குமா..? கன்னியாகுமரி மாவட்டத்தை ரொம்ப மட்டமாக நெனச்சிட்டாங்க,’ என ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.