திருச்சி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து, துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம், பாலக்கரை மற்றும் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தனிப்படை காவல்துறையினருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், பாலக்கரை அருகே வந்த காரை சோதனை செய்த போது, அதில் இரண்டு கிலோ கஞ்சாய் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் அருண்குமார் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் திமுகவில் பச்சை பெருமாள் பட்டி கிளை செயலாளர் இருந்து தற்போது இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும் தனது சொந்த ஊரில் இருந்து துறையூருக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
துறையூர் காவல் நிலைய காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் யாரும் கைது செய்யப்படாத நிலையில், தனிப்படை காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவையும், அதனை கடத்தி வந்த நபரையும் அதிரடியாக மடக்கி பிடித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.