தஞ்சை காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24), காந்திபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (25) என்பதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.