கோவை ; கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் குறித்து புகார் அளித்ததால், அவர்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதி எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வசித்து வருபவர்கள் வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வருபவர்களிடம் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பொறுப்பில்லாத தமிழக அரசு… இன்னும் ஒரு வாரம் தான் கெடு ; அதுக்குள்ள… ஜிகே வாசன் விடுத்த எச்சரிக்கை
இந்நிலையில் வீரலட்சுமியின் மகன்களை சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிமறைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனை செய்யும் அந்த இளைஞர்கள் வீரலட்சுமியையும், அவரது இரண்டு மகன்களையும் மிரட்டியுள்ளனர். இதனால், இருதரப்பிற்கு அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வீரலட்சுமியின் இல்லத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற இளைஞர்கள் வீரலட்சுமியின் குடும்பத்தினரை தாக்க முயன்றுள்ளனர். ஆனால் வீரலட்சுமி குடும்பத்தாரும் சுதாரித்து கொண்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
எனினும் தொடர்ந்து அக்கும்பல் தொடர்ந்து வீரலட்சுமி யின் இல்லத்தை நோட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வீரலட்சுமி மனு அளித்துள்ளார்.
மேலும் அந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிடும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.