காஞ்சிபுரம் அருகே தங்களின் வார்டுக்கு நல்லது செய்ய மறுப்பதாகக் கூறி திமுக பிரமுகரை 26 வயது இளைஞர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் (53). திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா (45). கோனேரிக்குப்பம் ஊராட்சி தலைவர். இவர்களுக்கு 3 குழந்தைகள். கடந்த ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இருந்து திமுக கட்சியில் இணைந்தார். அவருக்கு மாவட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25 ந்தேதி காலை உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு தன் பைக்கில் சேகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டருகே தலையாரி தெரு வந்தபோது வார்டு உறுப்பினர் கௌசல்யா என்பவரின் தம்பி இளவரசன் சேகரை வழிமறித்து கேள்விகளை எழுப்பினார்.
போன்ற கேள்விகளை சேகரிடம் இளவரசன் கேட்டதால் சேகர் மழுப்பலாகவும், வேண்டா வெறுப்பாகவும் பதிலளித்துள்ளார். அதனால் கோபம் அடைந்த இளவரசன் தான் வைத்திருந்த கத்தியால் சேகரின் முகத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சேகரை கழுத்திலும்,கையிலும், தலையிலும் பலம் கொண்டு இளவரசன் ஓங்கி வெட்டினார். கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சேகரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேற்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் சேகர் உயிரிழந்தார். அப்பகுதி மக்களிடமும் காவல்துறையினரின் கண்களிலும் சிக்காமல் இளவரசன் தலைமறைவானார்.
இதுசம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) வெங்கடேசன் தலைமையில் ஒரு தனிப்படையும், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார் ,முரளி தலைமையில் மாவட்ட தனிப்படையும் என இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட எல்லையில் பதுங்கி இருந்த குற்றவாளியான இளவரசனை தனிப்படை பிடித்து கைது செய்தது. மேலும் நடந்த சம்பவத்தை மறைத்ததற்காக கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த சக்தி (எ) சதீஷ்குமார் (23 ), அஜித் (25 ), ரங்கா (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான சேகர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 7 வழக்குகள் இருந்தது. சரித்திரப் பதிவு குற்றவாளியான இவருடைய தகவல்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.