சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் அருகே பல வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வந்த கடையின் உரிமையாளர் கஞ்சா போதை ஆசாமிகளால் படுபயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் என்ற பகுதியில் சுமார் 30 வருடங்களாக சிவஞானம் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அனைவரிடமும் நட்புடன் பழகும் சிவஞானம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
சிவஞானம் மளிகை கடை வியாபாரம் செய்து கொண்டே ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, இவருடைய கடைக்கு அருகே பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தும் சரவணன் என்பவர் கஞ்சா போதையில் தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சிவஞானத்தை வம்புக்கு இழுத்தனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மளிகை கடையில் இருந்த கத்தியை சரவணன் எடுத்து சிவஞானத்தை திடீரென தாக்க தொடங்கினர். இதில் நிலைகுலைந்து போன சிவஞானம் தப்பி ஓட முயன்று உள்ளார். அப்போது, சரவணன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் சேர்ந்து பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில், தடுமாறி கீழே விழுந்த சிவஞானத்தை சரவணன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தலை மற்றும் முகத்தில் கடுமையாக வெட்டியனர். அதில் படுகாயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சம்பவத்தை அறிந்த தாலுக்கா காவல்துறையினர் விரைந்து வந்து சிவஞானத்தின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவஞானத்தை வெட்டி படுகொலை செய்த ராஜகுளம் பகுதியை சேர்ந்த சரவணன், ஆபேல் மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரும் தாலுகா காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு சரணடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்டபோது, நிலப் பிரச்சனை காரணமாக சரவணன் உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து சிவஞானத்தை வெட்டி படுகொலை செய்ததாகவும், சரவணன் மீது ஏற்கனவே இரண்டு மூன்று வழக்குகள் உள்ளது எனவும் தெரிவித்தனர்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடையின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.