கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள காயக்கரையை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துணிக் கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளம்பெண், சில நாட்களில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர், நாகர்கோவிலில் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது கணவரையும் பிரிந்த அந்த இளம்பெண், மணலிகரையைச் சேர்ந்த ஆத்து கோணம் சுனில் என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
அவர்களுடன் முதல் கணவர் மூலம் பிறந்த 11 வயது சிறுமியும் வசித்து வந்தார். அந்தச் சிறுமியிடம் அவரது தாய் இல்லாத நேரத்தில் சுனில் தவறாக நடந்து உள்ளார். இளம்பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை 3 நாட்களாக சுனில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதனை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இருப்பினும், உடலில் வலி எடுத்ததால் சுனிலின் பாலியல் தொந்தரவு குறித்து தனது பாட்டியிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து அவரது பாட்டி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.