கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி (70). இவர் மண்வெட்டி தயாரித்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் வில்லுக்குறி பகுதியில் விற்பனையை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்புவதற்காக வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, குமாரகோயில் பகுதியை சேர்ந்த ஜெனிஷ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மணி மீது வேகமாக மோதியது. இதில் மணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், இருசக்கர வாகனமும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதனால், தீப்பொறி கிளம்பிய நிலையில், ஜெனிஷ் ஐ இழுத்தபடி பல அடி தூரம் சென்று பைக் நின்றது.
இதில், ஜெனிஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.