கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழந்து மீனவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சீர்குலைந்து கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை மறுசீரமைப்பு பணியை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூத்துறை மீனவ கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அரங்கேறி வந்தன. இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, கடந்த ஆட்சி காலத்தின் இறுதியில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும் இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது. இதனால், கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்ற மீனவர் பலியானார். அவரது உடலை சக மீனவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் நிலையில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து மீனவரின் இறப்பிற்குப் உரிய நிவாரணம் அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சீரமைக்கப்படாமல் கிடக்கும் துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக வேலை துவங்கி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூத்துறை சந்திப்பு பகுதியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து இணைப்பு சாலைகளில் கயிறுகள் கட்டி தடுப்பு அமைத்து கொளுத்தும் வெயிலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.
பதற்றம் நீடிக்கும் என்பதால் குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வருவாய்த்துறையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் போராட்டக்காரர்கள் அதிகாரிகளின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.