கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கண்மணி. இவர் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் இவரது வீடு உள்ளது இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வாளர் கண்மணி வீட்டில் இருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் அழகு நிலையம் வைத்திருப்பவர்களும் வரை சோதனை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய தமிழகத்தின் சிறந்த காவல் ஆய்வாளர் களில் ஒருவராக கண்மணி தேர்வு செய்யப்பட்ட அவருக்கு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது பல்வேறு போவார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.