தமிழகம்

திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டியடிப்பு.. வெளியான வீடியோ.. குமரியில் பரபரப்பு!

குமரி மாவட்டம், ஞாலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆய்வுக்குச் சென்ற பிரமுகர்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், ஞாலம் ஊராட்சி பகுதி இயற்கை எழில் மிகுந்த பகுதி ஆகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, இந்த கிராமங்களில் மின்சார சுடுகாடு திட்டம் கொண்டு வர அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த திட்டத்தைச் செயல்படுத்த குமரி மாவட்ட அதிகாரிகள் தரப்பில் இடம் தேர்வு செய்யச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு உள்ள ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகாரிகள் திரும்பி வந்துள்ளனர்.

இதனால் ஊர் மக்கள் கடந்த மாதம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது, அவர்கள் தங்கள் வாக்காளர் அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் ஒப்படைத்து விட்டு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் , குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் தலைமையில், அப்பகுதியின் திமுக ஊராட்சி மன்றத் தலைவர்களும், மின் மயானம் அமைக்க திட்டமிட்டு இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தனியாக இருந்த மூதாட்டி.. மிளகாய்பொடி தூவி கொலை.. திருப்பூரில் பரபரப்பு!

அப்போதும் அங்குள்ள ஊர் மக்கள், ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், திமுகவைச் சேர்ந்த தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத் தலைவர் பிராங்கிளின் மற்றும் ஞாலம் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ் ஆகிய இரண்டு பேரைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, அவர்களை அங்கிருந்து ஊர் மக்கள் விரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . அப்போது அவருடன் வந்த திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோரையும் அங்கிருந்து பொதுமக்கள் விரட்டியுள்ளனர்.

இதனால் மேயர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திமுக பிரமுகர்கள், மேயர் ஆகியோரை கிராமத்தினர் விரட்டியனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.