தமிழகம்

பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாய்மார்களுடன் உறவு… உல்லாசமாக இருந்த கராத்தே மாஸ்டர்!!

நெல்லை பேட்டையை அருகில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப் (35), ஒரு புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளர். அவர் கராத்தே மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையங்களை திருநகர், பள்ளிப்பட்டி, மற்றும் சிவாஜி நகர் பகுதிகளில் நடத்தி வருகிறார்.

இவரது கராத்தே வகுப்புகளில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். அதேபோல், துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையமும் இப்பகுதிகளில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இந்நிலையில், அப்துல் வகாப் மையத்தில் பயிற்சி பெறும் ஒரு தொழிலாளியின் இரண்டு குழந்தைகளை அவர்களது தாய் தினமும் காலை வகுப்புக்கு அழைத்து வந்து மாலை எடுத்துச் செல்வது வழக்கம்.

இதன்போது, வகாப் அந்த பெண்ணிடம் நட்பு காட்டி அவர் செல்போன் எண்ணை பெற்றார். பின்னர், அவர் அந்த பெண்ணிடம் அபத்தமான பேச்சு மூலம் நெருக்கம் காட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர், மனைவியை எச்சரித்தார், இதனால் அவர் வகாப்புடன் பேசுவதை நிறுத்தினார்.இதனால் கோபமடைந்த வகாப்,
சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, “நான் போன் செய்தபோது ஏன் எடுக்கவில்லை?” என்று கேட்டு அவதூறாக பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தினார்.

மேலும், பாலியல் தொல்லை அளித்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் பதறிப்போன அந்த பெண் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உடனே பயந்து போன வகாப் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை நடத்தியபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. வாகப் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாய்மாரை குறிவைத்து, அவர்களது செல்போன் எண்களை பெற்று பேசி வந்ததாகவும், சிலரை தனது வலையில் வீழ்த்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

இதில் சில பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இழந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, திருநகர் போலீஸார் நேற்று (செப்டம்பர் 9, 2025) இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்று அதிகாலை (செப்டம்பர் 10, 2025) முகமது ஷாஜனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுவதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.