கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில், பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி அதிமுக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களின் மகிழச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொது மக்களுக்கு நன்றி என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோன்று பாஜகவிற்கு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.