சென்னை: கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அவரது ஆடிட்டரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை ,சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இதில் எதுவும் சிக்கவில்லை என்று ப. சிதம்பரம் விளக்கமளித்தார்.
சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது முறைகேடாக விசா பெறப்பட்டிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவானது. இதனடிப்படையிலேயே நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில் நள்ளிரவில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடாக விசா வழக்கியது தொடர்பான வழக்கில் நேற்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.