தமிழகம்

வாந்தி எடுத்த சீமான்.. அடுத்த 4 நாட்களில்.. ஆனால் ‘அது’ இல்லை.. கரு.அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மைதான், ஆனால் இது கிராஃபிக்ஸ் போட்டோ என கரு.அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அதனை எடிட் செய்து கொடுத்ததே தான் என்றும் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரனின் அண்ணன் மகனான மனோகரன், எல்லாளன் திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் சீமான் – பிரபாகரன் சந்திப்பு குறித்து பேசியது விவாதத்தைக் கிளப்பியது.

அதேநேரம், சீமானும் இதற்கு தொடர்ந்து பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படும் கரு.அண்ணாமலை, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.

அதில், “சீமான் ஈழத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், பல நாட்கள் காத்திருந்து பிரபாகரனை பார்க்க சீமான் முயன்றார். அனுமதி மறுக்கப்பட்டதால், கொளத்தூர் மணி மூலமாக அவரைச் சந்தித்தார். பிரபாகரன் உடன் சீமான் புகைப்படம் எடுத்தது உண்மை. ஆனால், அது இந்தப் போட்டோ இல்லை. இது கிராஃபிக்ஸ்.

தமிழகத்தில் இருந்து பிரபாகரனைச் சந்திக்கச் சென்ற தலைவர்கள் பலர், படகில் சென்றனர். ஆனால், சீமான் அப்படி படகில் செல்லவில்லை. இரண்டு முறை கோடியக்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பயண ஏற்பாடு செய்த நிலையில், வாந்தி வந்ததால் அவ்வாறு செல்லவில்லை.

எனவே, பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சீமான் சென்றார். மற்றவர்களை அழைத்தது விடுதலைப் புலிகள். ஆனால், சீமானை அழைத்தது விடுதலைப் புலிகளின் கிளையான கலை பண்பாட்டுத்துறை தான். அதன் பொறுப்பாளரான சேரலாதன் அழைப்பின் பேரில் தான் சீமான் சென்றார்.

இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தவர் வன்னி அரசு. அங்கு சென்றும் பிரபாகரனைப் பார்க்க முடியாத நிலையில், கொளத்தூர் மணியைத் தொடர்பு கொண்டு பேசி, அதன் மூலம் பிரபாகரனைச் சந்திக்க வாய்ப்பு பெற்றார். இந்தச் சந்திப்பு நடந்ததும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.

அப்போது, சீமான் பிரபாகரன் உடன் போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர், அந்த போட்டோ கிடைக்குமா, அதை வாங்கிக்கொடு என சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் கேட்டார். அப்போது, ஈழப்போர் முடிவை நெருங்கி விட்டது. மேலும், போராளிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர்.

இதையும் படிங்க: மாடுகளை விற்று மாடர்ன் டாய்லெட்.. உட்ரா வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு.. சீர்காழி கல்யாண ராணி சிக்கியது எப்படி?

இனி போட்டோ கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறினேன். கிராபிக்ஸ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் சீமானிடம் சொன்னேன். அவ்வாறு சொன்ன நான்காவது நாளில் கிராஃபிக்ஸ் செய்த போலியான போட்டோவை வெளியிட்டார் சீமான்.

இதனையடுத்து, இயக்குநர் களஞ்சியத்திடம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் போலி எனக் கூறினேன். இது கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட போலியான போட்டோ என்பது களஞ்சியத்துக்குத் தெரியும். இப்போது மூன்று நாட்களுக்கு முன்பும் குறுஞ்செய்தியில் களஞ்சியத்திடம் சொன்னேன். ஆனால், அதற்குப் பதில் இல்லை. பணம் ஒன்று தான் சீமானுக்கு ஒரே குறிக்கோள். சங்ககிரி ராஜ்குமார் சொன்னதும் உண்மை தான்” என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.