வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், நீதிபதியை நோக்கி காலணியை வீசியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில், ரவுடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடரபிருக்கலாம் என்ற சந்தேகத்தால், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, திடீரென கருக்கா வினோத், தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நீதிபதியை நோக்கி வீசியுள்ளார். இதில், ஒரு செருப்பு நீதிபதியின் முன்பிருந்த மேசையின் மீதும், மற்றொரு காலணி நீதிபதி முன்பும் விழுந்துள்ளது. இதனால் நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் நம்பிக்’கை’யை நினைவுபடுத்திய விஜய்.. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு!
பின்னர், உடனே அங்கிருந்த போலீசார் கருக்கா வினோத்தை அப்புறப்படுத்தினர். அப்போது, கருக்கா வினோத், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என முழக்கமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மீண்டும் கருக்கா வினோத் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.