திண்டுக்கல்லில் ஆத்தூர் தாலுகாவில் மருத்துவர்கள் இன்றி நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு மருத்துவ முகாமில் செல்போன் டார்ச் மூலம் கண்ணை பரிசோதித்த செவிலியர்களால் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து செவிலியர்கள் கலந்து கொண்டனர் . இந்த முகாமில் சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவம் பார்ப்பதற்கு போதிய டார்ச் லைட் இல்லாததால் முதியவர்களுக்கு செல்போன் டார்ச் லைட் அடித்து கண் பரிசோதனை செய்தனர். சாதாரணமாக ஸ்மார்ட் போன் டார்ச் லைட்டை பார்க்க கூடாது என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், அதே டார்ச்சை வைத்து கண்ணை பரிசோதிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மருத்துவர்கள் இன்றி அனுபவம் குறைந்த செவிலியர்களை வைத்து மருத்துவ முகாம் நடத்துவதால் மக்களின் உடல்நிலை மேலும் பாதிப்பு ஏற்படும். எனவே, இது மாதிரி மருத்துவ முகாம்களை கவனமாக நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.